செய்திகள்

மாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி- பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2018-04-04 12:36 IST   |   Update On 2018-04-04 12:36:00 IST
மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் பிரமாண்டமான ராணுவ தளவாள கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் ஏப்ரல் 11-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் 480 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான ராணுவ தளவாள கண்காட்சி நடைபெற உள்ளது.

பாதுகாப்பு ஹெலிகாப்டர்களும், வான்வெளி வீர சாகசம் செய்யும் சிறுவகை விமானங்களும் தரை இறங்குவதற்காக 3 வகை தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் பிரதமர் வந்து இறங்கும் தளத்திலும் உரையாற்ற இருக்கும் அரங்கத்திலும் இரவு-பகலாக தீவிர பாதுகாப்பு மற்றும் கண் காணிப்புடன் பணிகள் நடந்து வருகிறது.

இந்த இரண்டு பகுதிகளும் தற்போது போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பணிக்காக செல்வோருக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு பின்னரே அனுப்பப்பட்டு வருகிறது.

வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. தளப் பகுதியை சுற்றி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நவீன ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews

Similar News