செய்திகள்

கொடுமுடி அருகே லாரி மோதிய விபத்தில் காரில் சென்ற 2 பேர் பலி

Published On 2018-02-28 10:30 IST   |   Update On 2018-02-28 10:30:00 IST
கொடுமுடி அருகே லாரியின் வலது புற டயர் வெடித்து கார் மீது மோதியதில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் புகழூர் காகித ஆலையில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்தார்.

இவரது மாமியார் வீடு ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் உள்ளது.

ரமேஷ் மற்றும் அவரது தந்தை பழனிசாமி (70). ரமேஷின் பெரியம்மா சுந்தரம்மாள் (70) ஆகிய 3 பேரும் ஒரு காரில் மாமியார் வீட்டுக்கு வந்தனர்.

பிறகு நேற்று மாலை கரூருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்ட எல்லையான சாலைப்புதூரை தாண்டி நொய்யல் வெள்ளைபாலம் பக்கம் சென்றபோது எதிரே கரூரில் இருந்து தேங்காய் மட்டைகள் ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

கார் அருகே வரும்போது திடீரென லாரியின் வலது புற டயர் திடீரென வெடித்தது. இதில் லாரி தறிகெட்டு ஓடி கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து காரின் இடிபாட்டுக்குள் சிக்கி தவித்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் வழியிலேயே சுந்தரம்மாள் பரிதாபமாக இறந்தார். கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ரமேசை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரமேசும் பரிதாபமாக இறந்தார்.

ரமேசின் தந்தை பழனிசாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கொடுமுடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான ரமேசுக்கு ஜெயசுதா (40) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் உடலை பார்த்து அவர் கதறி அழுத காட்சி மிகவம் உருக்கமாக இருந்தது.  #tamilnews

Similar News