செய்திகள்
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார் - மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார். #Kanchishankaracharya #JayendraSaraswathi
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தில் உலகப் புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடம் உள்ளது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கரர் இந்த மடத்தை நிறுவினார். காஞ்சி காமகோடி பீடம் என்றும் இந்த மடம் அழைக்கப்படுகிறது.
சங்கர மடத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுபவர் ‘‘சங்கராச்சாரியார்’’ என்ற பட்டத்துடன் திகழ்வார். பீடாதிபதி, மடாதிபதி என்றும் அழைப்பார்கள்.
காஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
காஞ்சீபுரத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கர மடத்திற்கும் சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற தவறுவதில்லை. காஞ்சி மடத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்து அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
சில மாதங்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் நீண்ட தூர யாத்திரைகளை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
7 டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிரமாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்தார்.
இதுபற்றி தகவல் பரவியதும் காஞ்சீபுரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காஞ்சி மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர். இதையெடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. 9.20-க்கு காஞ்சி மடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு மட நிர்வாகிகளால் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்டது.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலைகள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவரது ஆசி பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.
மடத்தில் உள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்தி அடைந்துள்ள ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வயது 84. இவர் 1935-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கி எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிர மணியம் மகாதேவர் அய்யர்.
சிறுவயதிலேயே புரோகிதத்தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இவர் இந்து சமய பெரியவர்களிடம் செல்வாக்கு பெற்றார். இதையடுத்து அவரை காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதியாக 1954-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் அறிவித்தார்.
சுப்பிரமணியன் என்ற பெயரை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயர்சூட்டி பக்தர்களுக்கு அறிமுகம் செய்தார். இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு வயது 19.
1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு இவர் காஞ்சி மடத்தின் முதன்மை மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
ஆன்மீகம் தவிர கல்வி, மருத்துவம் உள்பட பல்வேறு பணிகளிலும் அவர் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார்.
காஞ்சி மகா பெரியவரை பின்பற்றி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சங்கரமடங்களுக்கு சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
ஏழை, எளியோர்களுக்காக கல்வியில் அவர் செய்த சேவை மிகுந்த வரவேற்பை பெற்றது. அதுபோல ஏராளமான பழைய ஆலயங்களை சீரமைத்து புதுப்பித்தம் செய்ததிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
1988-ம் ஆண்டு அவர் நேபாளம் சென்றார். நேபாளம் மன்னர் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
1998-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மானசரோவர் மற்றும் கைலாய மலைக்கு சென்றார். ஆதி சங்கரருக்கு பிறகு இந்த இடங்களுக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் என்ற சிறப்பை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெற்றார்.
கைலாயத்தில் ஆதி சங்கரரின் சிலையை நிறுவி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தார். அதுபோல மானசரோவரிலும் ஆதி சங்கரருக்கு சிலை எடுத்தார்.
2000-ம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்கா சென்றார். அந்த நாட்டிற்கு சென்ற ஒரே சங்கராச்சாரியாரும் இவர்தான். அங்கு அவருக்கு மிகுந்த உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டாக்காவில் தகேஸ்வரி ஆலயத்திற்கு நுழைவாயில் அமைத்து கொடுத்தார். இப்படி ஏராளமான திருப்பணிகளை அவர் செய்துள்ளார். அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
2004-ம் ஆண்டு காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் கைதான அவர் 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. 2 மாதங்களுக்கு முன்பு ஒருதடவை அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பிறகு மடத்திற்கு திரும்பினார்.
அதன் பிறகு அவர் மடத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தார். ஆனால் இன்று காலை அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் முக்தியை அளித்து விட்டது.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்ததை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மதுரை ஆதினம் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Kanchishankaracharya #JayendraSaraswathi
காஞ்சீபுரத்தில் உலகப் புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடம் உள்ளது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கரர் இந்த மடத்தை நிறுவினார். காஞ்சி காமகோடி பீடம் என்றும் இந்த மடம் அழைக்கப்படுகிறது.
சங்கர மடத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று செயல்படுபவர் ‘‘சங்கராச்சாரியார்’’ என்ற பட்டத்துடன் திகழ்வார். பீடாதிபதி, மடாதிபதி என்றும் அழைப்பார்கள்.
காஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு மடாதிபதி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
காஞ்சீபுரத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கர மடத்திற்கும் சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற தவறுவதில்லை. காஞ்சி மடத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்து அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
சில மாதங்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் நீண்ட தூர யாத்திரைகளை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
7 டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிரமாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்தார்.
இதுபற்றி தகவல் பரவியதும் காஞ்சீபுரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. காஞ்சி மடத்தின் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர். இதையெடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. 9.20-க்கு காஞ்சி மடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு மட நிர்வாகிகளால் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்டது.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலைகள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவரது ஆசி பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.
மடத்தில் உள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்தி அடைந்துள்ள ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வயது 84. இவர் 1935-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கி எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்பிர மணியம் மகாதேவர் அய்யர்.
சிறுவயதிலேயே புரோகிதத்தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இவர் இந்து சமய பெரியவர்களிடம் செல்வாக்கு பெற்றார். இதையடுத்து அவரை காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதியாக 1954-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் அறிவித்தார்.
சுப்பிரமணியன் என்ற பெயரை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயர்சூட்டி பக்தர்களுக்கு அறிமுகம் செய்தார். இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு வயது 19.
1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு இவர் காஞ்சி மடத்தின் முதன்மை மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
ஆன்மீகம் தவிர கல்வி, மருத்துவம் உள்பட பல்வேறு பணிகளிலும் அவர் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார்.
காஞ்சி மகா பெரியவரை பின்பற்றி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள சங்கரமடங்களுக்கு சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
ஏழை, எளியோர்களுக்காக கல்வியில் அவர் செய்த சேவை மிகுந்த வரவேற்பை பெற்றது. அதுபோல ஏராளமான பழைய ஆலயங்களை சீரமைத்து புதுப்பித்தம் செய்ததிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
1988-ம் ஆண்டு அவர் நேபாளம் சென்றார். நேபாளம் மன்னர் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
1998-ம் ஆண்டு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மானசரோவர் மற்றும் கைலாய மலைக்கு சென்றார். ஆதி சங்கரருக்கு பிறகு இந்த இடங்களுக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் என்ற சிறப்பை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெற்றார்.
கைலாயத்தில் ஆதி சங்கரரின் சிலையை நிறுவி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தார். அதுபோல மானசரோவரிலும் ஆதி சங்கரருக்கு சிலை எடுத்தார்.
2000-ம் ஆண்டு வங்கதேச தலைநகர் டாக்கா சென்றார். அந்த நாட்டிற்கு சென்ற ஒரே சங்கராச்சாரியாரும் இவர்தான். அங்கு அவருக்கு மிகுந்த உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டாக்காவில் தகேஸ்வரி ஆலயத்திற்கு நுழைவாயில் அமைத்து கொடுத்தார். இப்படி ஏராளமான திருப்பணிகளை அவர் செய்துள்ளார். அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
2004-ம் ஆண்டு காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் கைதான அவர் 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. 2 மாதங்களுக்கு முன்பு ஒருதடவை அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் பிறகு மடத்திற்கு திரும்பினார்.
அதன் பிறகு அவர் மடத்தை விட்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தார். ஆனால் இன்று காலை அவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் முக்தியை அளித்து விட்டது.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்ததை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மதுரை ஆதினம் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Kanchishankaracharya #JayendraSaraswathi