செய்திகள்

சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் முறைகேடு - காஞ்சீபுரம் கோர்ட்டில் ஸ்தபதி முத்தையா ஆஜர்

Published On 2018-02-26 09:56 GMT   |   Update On 2018-02-26 09:56 GMT
சோமாஸ்கந்தர் சிலையில் தங்கம் முறைகேடு வழக்கில் இன்று காலை காஞ்சீபுரம் 1-வது நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் ஸ்தபதி முத்தையா ஆஜர் ஆனார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் உள்ள பிரச்சித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5¾ கிலோ தங்கத்தில் புதிதாக சோமாஸ்கந்தர் உற்சவ சிலை செய்யப்பட்டது. இந்த சிலையின் தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலையை செய்த தலைமை ஸ்தலபதி முத்தையா, மற்றும் கோவில் செயல் அலுவலர் முருகேசன் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஸ்தபதி முத்தையா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி சிலை தடுப்பு பிரிவு அதிகரிகள் முன்னிலையில் 10 நாட்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பாஸ்போர்ட்டை காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை காஞ்சீபுரம் 1-வது நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் ஸ்தபதி முத்தையா ஆஜர் ஆனார்.

அப்போது தனது பாஸ்போர்ட்டை அவர் கோர்ட்டில் ஒப்படைத்தார். மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். #tamilnews

Tags:    

Similar News