செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கொலை குற்றவாளி கைது

Published On 2018-02-20 12:59 IST   |   Update On 2018-02-20 12:59:00 IST
சென்னை விமான நிலையத்தில் 2013-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

அபுதாபியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தஞ்சாவூர் அய்யப்பேட்டையை சேர்ந்த விஜயனிடம் (32) விசாரணை செய்த போது அவர் 2013-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது பற்றி தஞ்சாவூரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சென்னை வந்து கொண்டு இருக்கிறார்கள். #Tamilnews

Similar News