செய்திகள்
போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பிடித்தம் நியாயமற்ற செயல்: செந்தில்பாலாஜி தாக்கு
தங்களின் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள பிடித்தம் என்பது நியாயமற்ற செயல் என்று செந்தில் பாலாஜி கூறினார்.
ஈரோடு:
பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தினகரன் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாணவர் அணி இணைச் செயலாளர் பிரவு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் நடராஜன், பொருளாளர் சண்முகம், மாநகர் மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளருமான செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.-
போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 7 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். இது நியாயமற்ற செயல். அவர்களுக்கு முழுமையாக சம்பளத்தை கொடுக்க வேண்டும்.
தினகரனால் முகவரி கொடுக்கப்பட்ட பன்னீர் செல்வமும், சசிகலா மற்றும் தினகரனால் முதல்வரான எடப்பாடி பழனிசாமியும் நன்றி மறந்து செயல்பட்டனர். இதை மக்கள் உணர்ந்ததால் தான் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். அவர்கள் படுதோல்வி அடைந்தனர். டிடிவி தினகரன் பக்கம் தான் உண்மையான தொண்டர்களும், இளைஞர் படையும் உள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமான பதில் வரும். வரும் 24-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட உள்ளோம். அதற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews
பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தினகரன் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாணவர் அணி இணைச் செயலாளர் பிரவு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் நடராஜன், பொருளாளர் சண்முகம், மாநகர் மாவட்ட செயலாளர் பருவாச்சி பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளருமான செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது.-
போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 7 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். இது நியாயமற்ற செயல். அவர்களுக்கு முழுமையாக சம்பளத்தை கொடுக்க வேண்டும்.
தினகரனால் முகவரி கொடுக்கப்பட்ட பன்னீர் செல்வமும், சசிகலா மற்றும் தினகரனால் முதல்வரான எடப்பாடி பழனிசாமியும் நன்றி மறந்து செயல்பட்டனர். இதை மக்கள் உணர்ந்ததால் தான் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். அவர்கள் படுதோல்வி அடைந்தனர். டிடிவி தினகரன் பக்கம் தான் உண்மையான தொண்டர்களும், இளைஞர் படையும் உள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமான பதில் வரும். வரும் 24-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட உள்ளோம். அதற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #Tamilnews