செய்திகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: புதுமாப்பிள்ளை கைது
மயிலாடுதுறை அடுத்த செம்பனார் கோவில் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் கண்ணன் (வயது 55). இவர், தனது மாடி வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.
இவரது மனைவி குணசுந்தரி (50), இவர்களுக்கு சரண்யா (22), சுகன்யா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
மகள் சரண்யாவுக்கும், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறையில் பணியாற்றும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சரண்யா, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி விக்னேஸ்வரன் தனது மனைவி சரண்யாவை பார்ப்பதற்காக ஆக்கூரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியிடம் சந்தித்து பேசி விட்டு விக்னேஸ்வரன் வெளியே சென்று விட்டார்.
இந்தநிலையில் மாலையில் கண்ணனின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் கண்ணன் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு வீட்டில் கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர். இதைக்கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரண்யாவுக்கும், விக்னேஸ்வரனுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கணவரை பிரிந்து சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்ததால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்று போலீசார் விசாரித்து வந்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரண்யாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு விக்னேஷ்வரன் தொல்லைப்படுத்தியது என தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரும் தற்கொலைக்கு தூண்டியதாக விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சரண்யாவுக்கு திருமணமாகி 6 மாதமே ஆவதால் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் கண்ணன் (வயது 55). இவர், தனது மாடி வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.
இவரது மனைவி குணசுந்தரி (50), இவர்களுக்கு சரண்யா (22), சுகன்யா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
மகள் சரண்யாவுக்கும், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புள்ளியியல் துறையில் பணியாற்றும் விக்னேஸ்வரன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சரண்யா, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
பொங்கல் பண்டிகையையொட்டி விக்னேஸ்வரன் தனது மனைவி சரண்யாவை பார்ப்பதற்காக ஆக்கூரில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியிடம் சந்தித்து பேசி விட்டு விக்னேஸ்வரன் வெளியே சென்று விட்டார்.
இந்தநிலையில் மாலையில் கண்ணனின் வீடு பூட்டி கிடந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் கண்ணன் வீட்டின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர்.
அங்கு வீட்டில் கண்ணன், அவரது மனைவி குணசுந்தரி, மகள்கள் சரண்யா, சுகன்யா ஆகிய 4 பேரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினர். இதைக்கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரண்யாவுக்கும், விக்னேஸ்வரனுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கணவரை பிரிந்து சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்ததால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்று போலீசார் விசாரித்து வந்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரண்யாவிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு விக்னேஷ்வரன் தொல்லைப்படுத்தியது என தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரும் தற்கொலைக்கு தூண்டியதாக விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் சரண்யாவுக்கு திருமணமாகி 6 மாதமே ஆவதால் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews