செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2017-12-13 05:47 GMT   |   Update On 2017-12-13 05:47 GMT
நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நேற்று இரவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து மிதமான தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வந்த மழையால் அணைக்கு நேற்று இரவில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வினாடிக்கு 560 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் இன்று காலை 7 மணியில் இருந்து வினாடிக்கு 2204 கனஅடி வீதம் தண்ணீர் வந்த கொண்டிருக்கிறது.

பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1500 கனஅடி வீதம் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் பாசனத்துக்காக வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 73.50 அடியாக இருந்தது. அணைக்கு இதே போல் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால் அதை அப்படியே பாசனத்துக்கு திறந்து விட வாய்ப்பாக இருக்கும் என்பதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
Tags:    

Similar News