செய்திகள்

கூவத்தூரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் கைது

Published On 2017-11-21 06:19 GMT   |   Update On 2017-11-21 06:20 GMT
கூவத்தூரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரை சேர்ந்தவர் தயாளன். இவர் தனது நிலத்துக்கு பட்டா மாற்றம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் நடராஜனிடம் மனு அளித்தார்.

இதனை ஆய்வு செய்த நடராஜன் நிலத்தில் சில வில்லங்கம் இருப்பதால் அதனை சரி செய்ய ரூ.5 லட்சம் செலவாகும். முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தயாளன் இது பற்றி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனை படி தயாளன்ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கிராம அலுவலர் நடராஜனிடம் கொடுத்தார்.

அதனை அவர் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நடராஜனை கைது செய்தனர். இது பற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News