செய்திகள்
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2574 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியான குன்னூர், கோத்தகிரி பகுதியில் கன மழை கொட்டியது. இதையொட்டி பவானிசாகர் அணைக்கு இன்று (புதன்கிழமை) காலை முதல் மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1661 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை அது உயர்ந்து வினாடிக்கு 2574 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 75.36 அடியாக உள்ளது. குடிநீருக்கு பவானி ஆற்றுக்கு 80 கனஅடி வீதம் தண்ணீரும், வாய்க்காலுக்கு 2300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு தொடர்ந்து பரவலக மழை பெய்தது. சென்னிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகபட்சமாக மழை கொட்டியது. அந்த பகுதியில் 31 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதனால் தாழ்வான பகுதியில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று நீர் பிடிப்பு பகுதியான குன்னூர், கோத்தகிரி பகுதியில் கன மழை கொட்டியது. இதையொட்டி பவானிசாகர் அணைக்கு இன்று (புதன்கிழமை) காலை முதல் மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1661 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை அது உயர்ந்து வினாடிக்கு 2574 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 75.36 அடியாக உள்ளது. குடிநீருக்கு பவானி ஆற்றுக்கு 80 கனஅடி வீதம் தண்ணீரும், வாய்க்காலுக்கு 2300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு தொடர்ந்து பரவலக மழை பெய்தது. சென்னிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகபட்சமாக மழை கொட்டியது. அந்த பகுதியில் 31 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதனால் தாழ்வான பகுதியில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது