செய்திகள்

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு வரப்பட்ட ரூ.28 லட்சத்துடன் மாயமான டிரைவர் நாமக்கல்லில் கைது

Published On 2017-10-31 09:12 IST   |   Update On 2017-10-31 09:12:00 IST
சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு வரப்பட்ட ரூ.28 லட்சத்துடன் மாயமான டிரைவரை போலீசார் நேற்று நாமக்கல்லில் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம். ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம்.மில் கடந்த 25-ந் தேதி பணத்தை நிரப்ப வந்தபோது வேன் டிரைவர் உதயகுமார் (வயது 40) என்பவர் ரூ.28 லட்சத்துடன் மாயமாகி விட்டார். அவரை பிடிக்க பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில், விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படையினர் உதயகுமாரின் செல்போன் உரையாடல்களை வைத்து விசாரித்தனர். அப்போது அவர் சேலம் அருகே நாமக்கல்லில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து நாமக்கல் சென்ற தனிப்படை போலீசார் நேற்று உதயகுமாரை கைது செய்தனர். ஆனால் அவரிடம் பணம் எதுவுமில்லை.

இது குறித்து துருவித்துருவி விசாரணை நடத்தி வருவதாகவும், பணம் குறித்து உதயகுமார் முன்னுக்கு பின் முரணாகவே பேசி வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Similar News