செய்திகள்

வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகள்: ஓராண்டுக்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-10-30 07:13 GMT   |   Update On 2017-10-30 07:13 GMT
மோட்டார் வாகன விபத்துக்களில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

மோட்டார் வாகன விபத்துக்களில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கீழமை நீதிமன்றங்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, இழப்பீடு வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என முக்கியமாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்குகளை 3 முறைக்கு மேல் ஒத்தி வைக்க கூடாது எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அதிக அளவு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை சிரமப்படுத்த கூடாது எனவும் உத்தரவில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News