செய்திகள்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காரணமாக காதலுடன் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சுகாசினி (வயது 18). இவர் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.
குத்தாலம் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த சீத்தாராமன் என்பவரது மகன் சுரேஷ் (21). கட்டிட தொழிலாளி.
இந்த நிலையில் மாணவி சுகாசினிக்கும், சுரேசுக்கும் இடையே கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் சுகாசினியின் தந்தை நாகராஜனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மகளை கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று சுகாசினிக்கும், அவரது தந்தை நாகராஜனுக்கும் இடையே காதல் விவகாரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சுகாசினி நேற்று மாலை காதலன் சுரேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கும் அவர்களது காதலுக்கு சுரேசின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடி இருவரும் அங்கிருந்து வெளியேறினர். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று சுரேஷ், சுகாசினி இருவரும் விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர் காதல் ஜோடி விஷம் குடித்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இருவரையும் மீட்டு குத்தாலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேசும், சுகாசினியும் பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காரணமாக காதலுடன் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சுகாசினி (வயது 18). இவர் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.
குத்தாலம் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த சீத்தாராமன் என்பவரது மகன் சுரேஷ் (21). கட்டிட தொழிலாளி.
இந்த நிலையில் மாணவி சுகாசினிக்கும், சுரேசுக்கும் இடையே கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் சுகாசினியின் தந்தை நாகராஜனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் மகளை கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று சுகாசினிக்கும், அவரது தந்தை நாகராஜனுக்கும் இடையே காதல் விவகாரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சுகாசினி நேற்று மாலை காதலன் சுரேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கும் அவர்களது காதலுக்கு சுரேசின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடி இருவரும் அங்கிருந்து வெளியேறினர். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று சுரேஷ், சுகாசினி இருவரும் விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற சிலர் காதல் ஜோடி விஷம் குடித்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இருவரையும் மீட்டு குத்தாலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேசும், சுகாசினியும் பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காரணமாக காதலுடன் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.