செய்திகள்
புதுக்கோட்டையில் பஸ் நிலைய கழிவறையில் கிடந்த 16 ஐம்பொன் சாமி சிலைகள்
புதுக்கோட்டை பேருந்து நிலைய கழிவறையில் பதினாறு ஐம்பொன் சாமி சிலைகள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
இந்தியா முழுவதும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து விலையுயர்ந்த மற்றும் கலைநயம் மிக்க ஐம்பொன் சாமி சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் விற்கும் சர்வதேச கும்பல் இயங்கி வருகிறது. தமிழகத்தில் அரியலூர், நெல்லை, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டன.
இதில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு சிலைகளை மீட்டனர். இது தொடர்பாக விசாரிக்கவும், திருடு போன சிலைகளை மீட்கவும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே புதுக்கோட்டையில் இன்று 16 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:-
புதுக்கோட்டை பேருந்து நிலையம் இன்று காலை பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் பலர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்களில் ஏறி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கழிவறை பகுதியில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்த போது, அதில் ஏராளமான சாமி சிலைகள் இருந்தன.
அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், இது குறித்து நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் புதுக்கோட்டை தாசில்தார் செந்தமிழ்குமரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு சென்று சிலைகள் இருந்த பையை பார்வையிட்டனர். அப்போது பையில் சிறிய அளவிலான 16 ஐம்பொன் சாமி சிலைகள் மற்றும் ஒரு காமாட்சி ஐம்பொன் விளக்கு ஆகியவை இருந்தது. குறிப்பாக அதில் விநாயகர், ஆஞ்சநேயர், தவழும் கிருஷ்ணர், நரசிம்மர், வில் ஏந்திய ராமர் உள்ளிட்ட சாமி சிலைகள் இருந்தன.
அந்த சிலைகளை அங்கு போட்டு விட்டு சென்றது யார் என்று தெரியவில்லை. மதுரையை சேர்ந்த 2 பேர் சிலைகளை கடத்தி வந்ததும், புதுக்கோட்டை வந்ததும் போலீசாருக்கு பயந்து அதனை பேருந்து நிலைய கழிவறை பகுதியில் போட்டு விட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி, சிலைகளை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட 16 ஐம்பொன் சாமி சிலைகள் மற்றும் ஐம்பொன் விளக்கு ஆகியவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து விலையுயர்ந்த மற்றும் கலைநயம் மிக்க ஐம்பொன் சாமி சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் விற்கும் சர்வதேச கும்பல் இயங்கி வருகிறது. தமிழகத்தில் அரியலூர், நெல்லை, அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டன.
இதில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு சிலைகளை மீட்டனர். இது தொடர்பாக விசாரிக்கவும், திருடு போன சிலைகளை மீட்கவும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே புதுக்கோட்டையில் இன்று 16 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:-
புதுக்கோட்டை பேருந்து நிலையம் இன்று காலை பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் பலர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ்களில் ஏறி சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள கழிவறை பகுதியில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை பிரித்து பார்த்த போது, அதில் ஏராளமான சாமி சிலைகள் இருந்தன.
அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், இது குறித்து நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் புதுக்கோட்டை தாசில்தார் செந்தமிழ்குமரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு சென்று சிலைகள் இருந்த பையை பார்வையிட்டனர். அப்போது பையில் சிறிய அளவிலான 16 ஐம்பொன் சாமி சிலைகள் மற்றும் ஒரு காமாட்சி ஐம்பொன் விளக்கு ஆகியவை இருந்தது. குறிப்பாக அதில் விநாயகர், ஆஞ்சநேயர், தவழும் கிருஷ்ணர், நரசிம்மர், வில் ஏந்திய ராமர் உள்ளிட்ட சாமி சிலைகள் இருந்தன.
அந்த சிலைகளை அங்கு போட்டு விட்டு சென்றது யார் என்று தெரியவில்லை. மதுரையை சேர்ந்த 2 பேர் சிலைகளை கடத்தி வந்ததும், புதுக்கோட்டை வந்ததும் போலீசாருக்கு பயந்து அதனை பேருந்து நிலைய கழிவறை பகுதியில் போட்டு விட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி, சிலைகளை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட 16 ஐம்பொன் சாமி சிலைகள் மற்றும் ஐம்பொன் விளக்கு ஆகியவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.