செய்திகள்

பண்ருட்டியில் மாணவி பாலியல் பலாத்காரம்: என்ஜினீயர் கைது

Published On 2017-09-03 21:45 IST   |   Update On 2017-09-03 21:45:00 IST
பண்ருட்டியில் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள வேலன் குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை கடந்த சிலநாட்களாக காணவில்லை.

இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி பண்ருட்டி பஸ் நிலையத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார்.

போலீசார் நடத்திய விசாரனையில் அந்த மாணவியை பண்ருட்டி அருகே உள்ள வேலன் குப்பம் பகுதியை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன் ( 24) என்ஜீனியர் என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

அதன் பின்னர் மாணவியை பண்ருட்டி பஸ் நிலையத்தில் விட்டு விட்டு இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் மாணவியின் பெற்றோரை அழைத்து நடந்த சம்பவத்தை கூறி மாணவியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News