செய்திகள்
மாணவி மகேஸ்வரி.

புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2017-07-31 15:03 IST   |   Update On 2017-07-31 15:03:00 IST
புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பழைய கள்ளுக்கடை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கூலி தொழிலாளி. இவரது மகள் மகேஸ்வரி (வயது 6). கீரனூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மகேஸ்வரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். உடனே அவளை சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அவளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதேபோல் கீரனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் சுகாதார பணியாளர்களும், பேரூராட்சி பணியாளர்களும் முகாமிட்டு கொசுமருந்து அடித்தும், சாக்கடைகளை சுத்தம் செய்தும் வருகின்றனர்.

Similar News