செய்திகள்
திருச்சி அருகே அரசு பஸ் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி
திருச்சி அருகே இன்று காலை அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய 3 பேர் பலியானார்கள்.
விராலிமலை:
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் முகமது காதர் (வயது 32). இவர் உள்பட நண்பர்கள் 5 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சீசன் களை கட்டியுள்ளதால் பல்வேறு அருவிகளுக்கு சென்று குளித்த அவர்கள் நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் விராலிமலை பகுதிக்கு வந்த 5 பேரும் சாலையோர கடையில் டீ குடித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை நெருங்கி கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து விராலிமலை நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விராலிமலைக்குள் நுழைவதற்காக கொண்டம நாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் திரும்பியது.
அதே சமயம் திருச்சி நோக்கி அதிக வேகமாக வந்த கார் டவுன் பஸ்சின் பக்கவாட்டில் மோதி சொருகிக் கொண்டது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
காரில் பயணம் செய்த சபியுல்லா (36), முகமது காதர் (32), சிவகங்கையை சேர்ந்த முகமது காசிம் (35) ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருச்சி பொன்நகர் பகு தியை சேர்ந்த முகமது பைசல் (34), பாலக்கரையை சேர்ந்த முகமது முஸ்தபா (30) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கீரனூர் டி.எஸ்.பி. பாலகுரு ஆகியோர் பார்வையிட்டனர்.
விபத்து குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன், சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. கார் டிரைவர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதா? அல்லது காரில் வந்தவர்கள் மது போதையில் இருந்தார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் முகமது காதர் (வயது 32). இவர் உள்பட நண்பர்கள் 5 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சீசன் களை கட்டியுள்ளதால் பல்வேறு அருவிகளுக்கு சென்று குளித்த அவர்கள் நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் விராலிமலை பகுதிக்கு வந்த 5 பேரும் சாலையோர கடையில் டீ குடித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை நெருங்கி கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து விராலிமலை நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விராலிமலைக்குள் நுழைவதற்காக கொண்டம நாயக்கன்பட்டி பிரிவு ரோட்டில் திரும்பியது.
அதே சமயம் திருச்சி நோக்கி அதிக வேகமாக வந்த கார் டவுன் பஸ்சின் பக்கவாட்டில் மோதி சொருகிக் கொண்டது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
காரில் பயணம் செய்த சபியுல்லா (36), முகமது காதர் (32), சிவகங்கையை சேர்ந்த முகமது காசிம் (35) ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருச்சி பொன்நகர் பகு தியை சேர்ந்த முகமது பைசல் (34), பாலக்கரையை சேர்ந்த முகமது முஸ்தபா (30) ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கீரனூர் டி.எஸ்.பி. பாலகுரு ஆகியோர் பார்வையிட்டனர்.
விபத்து குறித்து விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன், சப்-இன்ஸ்பெக்டர் இசைவாணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. கார் டிரைவர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதா? அல்லது காரில் வந்தவர்கள் மது போதையில் இருந்தார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.