செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2017-07-10 09:23 IST   |   Update On 2017-07-10 09:23:00 IST
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி வருகிற 17-ந் தேதி தொடங்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த சர்ச்சையும் கிடையாது. திட்டமிட்டபடி வருகிற 17-ந் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும். மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

இதேபோல உயர் மருத்துவ படிப்பில் மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. எப்போதும் தமிழக அரசு மருத்துவர்கள் பக்கம் தான் இருக்கும். இதை உறுதிப்படுத்துவதற்காக தான் இடஒதுக்கீடு முறையை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News