செய்திகள்
கைதான சுகுமாறன்

பலருடன் பழகியதால் காதலியை கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம்

Published On 2017-06-22 14:34 IST   |   Update On 2017-06-22 14:34:00 IST
மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே பலருடன் பழகியதால் காதலியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள விடுதியில் நேற்று மதியம் பரங்கிமலையை சேர்ந்த வசந்தி (37) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நிர்வாண நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் மீட்டனர்.

இது தொடர்பாக அவருடன் தங்கி இருந்த சென்னை கே.கே.நகரை சேர்ந்த சுகுமாறனை (52) போலீசார் கைது செய்தனர். மாநகர பஸ்சில் தப்பி செல்ல முயன்ற அவரை கோவளம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

கள்ளக்காதல் தகராறில் அவர் கத்தியால் குத்தி வசந்தியை கொலை செய்து இருப்பது தெரிந்தது.

கொலையுண்ட வசதியின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதே போல் கைதான சுகுமாறன் மனைவியை பிரிந்து ஒரு மகன், மகளுடன் வசித்து வந்து இருக்கிறார்.

கொலைகுறித்து சுகுமாறன் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

வசந்தி பணி செய்த நிறுவனத்துக்கு வேலை சம்பந்தமாக சென்ற போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

என்னிடம் மட்டும் இல்லாமல் மேலும் பலருடனும் வசந்திக்கு பழக்கம் இருந்தது. எனவே மற்றவர்களுடனான தொடர்பை துண்டித்து விடும்படி கூறினேன்.

ஆனால் அவள், எனக்கு பணப்பிரச்சனை உள்ளது. 2 மகன்களை கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கி வசந்தியிடம் கொடுத்தேன். சில மாதங்களாக அவள் மற்றவர்களுடன் தொடர்பை விட்டு இருந்தாள். ஆனால் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பழைய தொடர்பை தொடர்ந்தாள். இதனால் நான் அவளை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதற்காக மாமல்லபுரத்துக்கு வசந்தியை அழைத்து சென்று லாட்ஜில் தங்கினேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் கழிவறைக்கு வசந்தி சென்றாள். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அவளை கொலை செய்தேன்.

இவ்வாறு சுகுமாறன் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

விடுதியில் அறை எடுத்த போது சுகுமாறன் தனது முகவரியை மாற்றி கொடுத்துள்ளார். ஆனால் தனது செல் நம்பரை மாற்றிக்கொடுக்க மறந்து விட்டார். இதனை வைத்தே போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அவர் வைத்திருந்த செல்போன் மூலம் கோவளம் அருகே சென்று கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மாநகர பஸ்சில் தப்பி சென்ற சுகுமாறனை கைது செய்தனர்.

கைதான சுகுமாறனை இன்று திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

Similar News