செய்திகள்

மற்ற கட்சியில் இணையாமல் ரஜினிகாந்த் தனித்து செயல்பட வேண்டும்: திருமாவளவன்

Published On 2017-05-20 15:57 IST   |   Update On 2017-05-20 15:57:00 IST
மற்ற கட்சியில் இணையாமல் ரஜினிகாந்த் தனித்து செயல்பட வேண்டும் என்பதே இளைஞர்கனிள் விருப்பம். விடுதலை சிறுத்தைகளின் விருப்பமும் அதுதான் என திருமாவளவன் கூறியுள்ளார்.
பண்ருட்டி:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நெய்வேலி வந்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டனர். அப்போது திருமாவளவன் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது தனிப்பட்ட விசயம். தமிழகத்தில் மூத்த அரசியல்வாதிகள் அனைவருடன் அவர் தொடர்புள்ளவர். அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

அவர் பாரதிய ஜனதாவில் சேரப்போகிறார், காங்கிரசில் சேரப்போகிறார் என்று கூறப்படுகிறது. அவர் தனித்து செயல்பட வேண்டும் என்பதே இளைஞர்கனிள் விருப்பம். விடுதலை சிறுத்தைகளின் விருப்பமும் அதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து தலித்துகள் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. இதனை கண்டித்து பண்ருட்டியில் ஆர்பாட்டம் இன்று நடைப்பெறுகிறது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Similar News