செய்திகள்
அந்தியூரில் மருந்துகடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
அந்தியூரில் மருந்துகடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் பர்கூர் ரோட்டில் போலீஸ் நிலையம் அருகே ஒரு மருந்து (மெடிக்கல்) கடை உள்ளது. கடையின் உரிமையாளர் மளிகை பொருள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார்.
இதில் வசூலானபணம் மற்றும் மருந்து கடையில் வசூலான பணம் ஆகியவற்றை கடையின் கல்லா பெட்டியில் வைத்து பூட்டிக் கொண்டு வழக்கம் போல் நேற்று இரவு 10 மணிக்கு கடையைஅடைத்துக் கொண்டு சென்று விட்டார்.
நள்ளிரவில் யாரோ மர்மஆசாமி கடையின் ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து திறந்து கடைக்குள் புகுந்தனர்.
கடைக்குள் புகுந்த கொள்ளையன் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்தான். பிறகு ஷட்டரை இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த கடை உரிமையாளர் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு திடுக்கிட்டார். பிறகு இதுகுறித்து அந்தியூர் போலிசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையில் கேமிரா வைக்கப்பட்டிருந்தது. அந்த கேமிராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருந்தது.
இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடிவருகிறார்கள்.
அந்தியூர் பர்கூர் ரோட்டில் போலீஸ் நிலையம் அருகே ஒரு மருந்து (மெடிக்கல்) கடை உள்ளது. கடையின் உரிமையாளர் மளிகை பொருள் ஏஜென்சியும் நடத்தி வருகிறார்.
இதில் வசூலானபணம் மற்றும் மருந்து கடையில் வசூலான பணம் ஆகியவற்றை கடையின் கல்லா பெட்டியில் வைத்து பூட்டிக் கொண்டு வழக்கம் போல் நேற்று இரவு 10 மணிக்கு கடையைஅடைத்துக் கொண்டு சென்று விட்டார்.
நள்ளிரவில் யாரோ மர்மஆசாமி கடையின் ஷட்டரில் உள்ள பூட்டை உடைத்து திறந்து கடைக்குள் புகுந்தனர்.
கடைக்குள் புகுந்த கொள்ளையன் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்தை கொள்ளையடித்தான். பிறகு ஷட்டரை இறக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த கடை உரிமையாளர் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு திடுக்கிட்டார். பிறகு இதுகுறித்து அந்தியூர் போலிசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையில் கேமிரா வைக்கப்பட்டிருந்தது. அந்த கேமிராவில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருந்தது.
இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம ஆசாமியை தேடிவருகிறார்கள்.