செய்திகள்

மாமல்லபுரத்துக்கு மாநகர ஏ.சி. பஸ்கள் ‘திடீர்’ நிறுத்தம்

Published On 2017-05-04 13:10 IST   |   Update On 2017-05-04 13:10:00 IST
சென்னை கோயம்பேடு, தி.நகர், பாரிமுனை ஆகிய பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு இயக்கப்பட்டு வந்த சென்னை மாநகர ஏ.சி. பஸ்கள் போதிய பராமரிப்பும், வருவாயும் இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன.
மாமல்லபுரம்:

சென்னை கோயம்பேடு, தி.நகர், பாரிமுனை ஆகிய பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு விடுமுறை நாட்களில் மட்டும் சென்னை மாநகர ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

போதிய பராமரிப்பும், வருவாயும் இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவை நிறுத்தப்பட்டன.

இதனால் கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் ஏ.சி. பஸ்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதே போல் கத்திரி வெயில் அதிகமானதால் ஏ.சி. பஸ்களில் செல்லலாம் என்று காத்திருந்த பயணிகளும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

இது குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் இருந்து முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு மட்டும் விரைவில் ஏ.சி. பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

கத்திரி வெயில் இன்று துவங்கி விட்டதால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஏ.சி. பஸ்சில் பயணம் செய்ய ஆர்வத்துடன் உள்ளனர்.

Similar News