செய்திகள்

அம்மாபேட்டை அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-05-03 16:07 IST   |   Update On 2017-05-03 16:07:00 IST
அம்மாபேட்டை அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மபேட்டை அருகேஉள்ள பூனாட்சி புதுவலவு காலனியை சேர்ந்தவர் வேலு (வயது 35). கட்டிட கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெயர் ஈஸ்வரி.

வேலு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் தங்கி அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

அவர் வேலை செய்யும் இடத்தில் சுமதி (30) என்ற பெண் சித்தாள்ஆக வேலை பார்த்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு இதுகள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளி உலகுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடி மோட்டார் சைக்கிளில் ஈரோடு வந்தனர். பஸ் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகன ஸ்டேண்டில் வண்டியை நிறுத்திய அவர்கள் பிறகு பஸ்சில் அம்மாபேட்டை வந்தனர்.

பிறகு அங்கிருந்து பூனாட்சி ஏரிக்கரைக்கு சென்ற கள்ளக்காதல் ஜோடி ஈரோட்டில் வாங்கி வந்த வி‌ஷத்துடன் சர்க்கரையும் கலந்து குடித்தனர்.

சிறிது நேரத்தில் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். நேற்று இரவு அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.

இன்று காலை ஏரிக்கரை வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அம்மா பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் பிறகு இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிந்து விட்டதால் மனம் உடைந்து கள்ளக்காதல் ஜோடி தற் கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Similar News

வடம்- Movie Review