செய்திகள்

புவனகிரியில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவன்

Published On 2017-03-30 09:58 GMT   |   Update On 2017-03-30 09:58 GMT
புவனகிரியில் குடும்ப தகராறில் மனைவியை கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரி தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 55). தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களது மகன் அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். மகள் திருவள்ளூரில் உள்ள கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.

பழனிவேலுக்கும், சகுந்தலாவுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு 10.40 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் பழனிவேல் ஆத்திரமடைந்து சகுந்தலாவை கையால் ஓங்கி அடித்தார். இதில் சகுந்தலா மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சகுந்தலா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்தகொலை தொடர்பாக பழனிவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News