செய்திகள்
ரூ.10 கோடி சொத்துக்கு போலி உயில் தயாரிப்பு: தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் கைது
திருப்பத்தூரில் தந்தையின் ரூ.10 கோடி சொத்துக்களை மகன் அபகரிக்க போலி உயில்களை தயார் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் உள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணு. இவருடைய மனைவி பச்சையம்மாள் (வயது 70). இவர்களது மகன் முரளி. இவருக்கு 2 மனைவிகள், 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ராஜ்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ராஜ்கண்ணுவுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் பூர்வீக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதனை அபகரிக்கும் நோக்கில் முரளி, தந்தை ராஜ்கண்ணுவின் கைரேகையை பதிவு செய்தார். பின்னர் தந்தை ராஜ்கண்ணு தனது சொத்துக்கள் அனைத்தையும் தனக்கு உயில் எழுதி கொடுத்ததாக முரளி ஆவணம் தயார் செய்தார்.
இதற்கு அப்போதைய திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் அரக்கோணம் ஜோதி வள்ளலார் நகரை சேர்ந்த கருணாகரன் (52) மற்றும் முரளியின் நண்பர்கள் சரவணன், சங்கர், லட்சுமணன் ஆகியோர் உதவியாக இருந்ததாக தெரிகிறது. ராஜ்கண்ணு இறந்தபிறகு அந்த சொத்துகள் அனைத்தையும் முரளி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இதுகுறித்து முரளியின் தாய் பச்சையம்மாள் கடந்த 24-9-16 அன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முரளி, அவரது நண்பர்கள் சரவணன், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் கருணாகரன், முரளியின் நண்பர் லட்சுமணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்த சார்பதிவாளர் கருணாகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் உள்ள கிருஷ்ணகிரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்கண்ணு. இவருடைய மனைவி பச்சையம்மாள் (வயது 70). இவர்களது மகன் முரளி. இவருக்கு 2 மனைவிகள், 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ராஜ்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ராஜ்கண்ணுவுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் பூர்வீக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதனை அபகரிக்கும் நோக்கில் முரளி, தந்தை ராஜ்கண்ணுவின் கைரேகையை பதிவு செய்தார். பின்னர் தந்தை ராஜ்கண்ணு தனது சொத்துக்கள் அனைத்தையும் தனக்கு உயில் எழுதி கொடுத்ததாக முரளி ஆவணம் தயார் செய்தார்.
இதற்கு அப்போதைய திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் அரக்கோணம் ஜோதி வள்ளலார் நகரை சேர்ந்த கருணாகரன் (52) மற்றும் முரளியின் நண்பர்கள் சரவணன், சங்கர், லட்சுமணன் ஆகியோர் உதவியாக இருந்ததாக தெரிகிறது. ராஜ்கண்ணு இறந்தபிறகு அந்த சொத்துகள் அனைத்தையும் முரளி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இதுகுறித்து முரளியின் தாய் பச்சையம்மாள் கடந்த 24-9-16 அன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முரளி, அவரது நண்பர்கள் சரவணன், சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் கருணாகரன், முரளியின் நண்பர் லட்சுமணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்த சார்பதிவாளர் கருணாகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.