செய்திகள்
இறந்த கிடந்த யானையை வனத்துறையினர் பார்வையிட்டனர்.

பவானிசாகர் வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை

Published On 2017-03-29 09:57 IST   |   Update On 2017-03-29 09:57:00 IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதி தண்ணீர்துறை என்ற இடத்தில் அழுகிய நிலையில் 22 வயதுள்ள பெண் யானை இறந்து கிடந்தது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதி தண்ணீர்துறை என்ற இடத்தில் அழுகிய நிலையில் 22 வயதுள்ள பெண் யானை இறந்து கிடந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் வனத்துறை டாக்டர் அசோகன் தலைமையில் மருத்துவக்குழுவினர் யானையின் உடற்கூறுகளை பரிசோதனை செய்தனர்.

இதில் யானை குடற்புழு நோய் தாக்கியதில் இறந்துள்ளது தெரிய வந்தது. தற்போது கோடை காலம் என்பதால் வனக்குட்டைகளில் போதிய தண்ணீர் இல்லாமல் இருப்பதாலும் சேறுடன் கலந்த நீரை யானைகள் பருகுவதால் தொற்று நோய் ஏற்பட்டு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு யானையின் உடல் அதே இடத்தில் பிற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டது.

Similar News