செய்திகள்
இரட்டை இலை சின்னம் முடக்கம்: அ.தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் அ.தி.மு.க. தொண்டர் விஷம் குடித்து தற் கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ளது. பனையூர். இந்த பகுதியை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 48). அ.தி.மு.க. தொண்டர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்ததும் பாண்டிதுரை மனவேதனை அடைந்து வந்தார். அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாண்டித்துரை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.