செய்திகள்
வாடிவாசலுக்கு மெடலை திருப்பி கொடுத்தேன், நெடுவாசலுக்காக உடலையும் கொடுப்பேன்: முன்னாள் விமானப்படை வீரர்
வாடிவாசலுக்கு மெடலை திருப்பி கொடுத்ததாக கூறிய முன்னாள் விமானப்படை வீரர் நெடுவாசலுக்காக உடலையும் கொடுப்பதாக போராட்ட களத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக கீரமங்கலம் நாடியம்மன் கோவில் திடலில் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் விமானப்படை வீரரும், ஜல்லிக்கட்டுக்காக தனது மெடலை திருப்பி கொடுத்தவருமான செல்வராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் ஒரு விவசாயி மகன் என்பதில் பெருமை கொள்வேன். சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். நம் மண், விவசாயத்தை காக்க எங்கே போராடினாலும் அங்கே போக வேண்டும் என்று நம்மாழ்வார் சொல்லியபடி ஒவ்வொரு போராட்ட களத்திற்கும் செல்வேன்.
வாடிவாசல் திறக்க வேண்டும் என்று நடந்த போராட்டத்துக்காக ஆதரவு தெரிவித்து எனக்கு விமானப் படையில் கிடைத்த மெடலை மாவட்ட கலெக்டரிடம் திருப்பி கொடுத்தேன்.
இப்போது இந்த நெடுவாசலை காக்க என் உடலைக் கொடுப்பேன். நாம் வாக்களித்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் நம்மை ஏமாற்றலாம். நாம் ஏமாறக் கூடாது. நல்லவர்களை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். இந்த போராட்டம் வெற்றி பெற தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் நெடுவாசலுக்கு வர வேண்டும் என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக கீரமங்கலம் நாடியம்மன் கோவில் திடலில் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் விமானப்படை வீரரும், ஜல்லிக்கட்டுக்காக தனது மெடலை திருப்பி கொடுத்தவருமான செல்வராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் ஒரு விவசாயி மகன் என்பதில் பெருமை கொள்வேன். சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். நம் மண், விவசாயத்தை காக்க எங்கே போராடினாலும் அங்கே போக வேண்டும் என்று நம்மாழ்வார் சொல்லியபடி ஒவ்வொரு போராட்ட களத்திற்கும் செல்வேன்.
வாடிவாசல் திறக்க வேண்டும் என்று நடந்த போராட்டத்துக்காக ஆதரவு தெரிவித்து எனக்கு விமானப் படையில் கிடைத்த மெடலை மாவட்ட கலெக்டரிடம் திருப்பி கொடுத்தேன்.
இப்போது இந்த நெடுவாசலை காக்க என் உடலைக் கொடுப்பேன். நாம் வாக்களித்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகள் நம்மை ஏமாற்றலாம். நாம் ஏமாறக் கூடாது. நல்லவர்களை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். இந்த போராட்டம் வெற்றி பெற தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் நெடுவாசலுக்கு வர வேண்டும் என்றார்.