செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் 1-ந்தேதி முழு கடையடைப்பு

Published On 2017-02-27 08:53 GMT   |   Update On 2017-02-27 09:31 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு பேராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தில் மட்டும் தொடங்கிய போராட்டம் இன்று மாவட்டம் முழுவதும் பரவியுள்ளது.

அதுமட்டுமின்றி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதே போல் இதற்கு ஆதரவு தெரிவித்து நாகை, கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

நாளுக்கு நாள் போராட்டத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவால் நிச்சயம் விடிவு கிடைக்கும் என்று நெடுவாசல் கிராம மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதற்கிடையே புதுக்கோட்டையில் மாவட்ட வர்த்தக சங்க அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் சீனுசின்னப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும். 21 லட்சம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள் உப்பு நிலமாக மாறக்கூடும்.

100 கி.மீ. சுற்றளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே இந்த ஆபத்துகளை கருத்தில்கொண்டு மத்திய அரசு உடனடியாக இயற்கை எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு பேராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Similar News