வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
ஈரோடு:
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 10 வயது மகள் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
உடல் நலக்குறைவால் அச்சிறுமி ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் வந்தாள். பாட்டி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாள்.
அச்சிறுமியின் பாட்டி சில வீடுகளை வாடகைக்கு விற்றிருந்தார். சம்பவத்தன்று சிறுமியின் பாட்டி கடைக்கு சென்று விட்டார். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள்.
அப்போது வாடகை வீட்டில் குடியிருக்கும் சாரு(வயது20) என்ற வாலிபர் சிறுமி வீட்டு கதவை தட்டியுள்ளார். சிறுமி கதவை திறந்ததும் சிறுமியிடம் நைசாக பேசி அவரை படுக்கையறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது கடைக்கு சென்றிருந்த சிறுமியின் பாட்டி வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் சாரு வேகமாக ஓடிவிட்டான். நடந்தது குறித்து சிறுமி பாட்டியிடம் கூறி அழுதாள்.
இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கும், சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜெகன்ராஜ், உறுப்பினர் நிஷா, ஜீலியட் ஆகியயோர் வந்து விசாரித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சாருவை கைது செய்தனர்.