செய்திகள்

கடலூரில் ஸ்டூடியோவில் ரூ.13 லட்சம் வீடியோ கேமராக்கள் கொள்ளை

Published On 2017-02-24 11:08 GMT   |   Update On 2017-02-24 11:08 GMT
கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் கொள்ளை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் அகஸ்டின்(வயது 40). இவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஸ்டூடியோ வைத்துள்ளார்.

நேற்று கடலூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் படம் எடுக்க வீடியோ கேமராக்களுடன் சென்றார். இரவு 11.30 மணியளவில் அகஸ்டின் மீண்டும் ஸ்டூடியோவுக்கு வந்தார். வீடியோ கேமராக்களை ஸ்டூடியோவில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். ஸ்டூடியோவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 7 வீடியோ கேமராக்கள் மற்றும் பெட்டியில் இருந்த 3 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.

இன்று காலை 5.30 மணிக்கு ஸ்டூடியோவுக்கு வந்த அகஸ்டின் அங்கு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். ஸ்டூடியோவில் கொள்ளையடித்து சென்ற மர்மமனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் கொள்ளை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News