செய்திகள்
சத்தியபாமா

சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வரவேற்கத்தக்கது: சத்தியபாமா எம்.பி.

Published On 2017-02-15 05:16 GMT   |   Update On 2017-02-15 05:16 GMT
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக சத்தியபாமா எம்.பி. தெரிவித்துள்ளார்.
கோபி:

திருப்பூர் தொகுதி எம்.பி. சத்தியபாமா சென்னையில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்தார்.

இதையொட்டி தொகுதி மக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சத்திய பாமா எம்.பி. கூறினார்.

அவர் கூறியதாவது:- பன்னீர் செல்வம் பக்கம் சேர்ந்ததால் எனக்கு பலர் போனிலும் வாட்ஸ்-அப்பில் வரவேற்பு தெரிவித்து “நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள்” பாராட்டுகிறேன் என்று கூறி வருகிறார்கள்.

மேலும் பலர் என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது எனக்கு மனநிறைவை கொடுத்துள்ளது.

இது மட்டுமல்ல லண்டன், சிங்கப்பூர், ஏமன், மலேசியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகிறார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சசிகலாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. வரவேற்கத்தக்கது. எதிர்பார்த்ததுதான் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நாங்களாக இருந்தாலும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

இவ்வாறு சத்தியபாமா எம்.பி கூறினார்.

Similar News