செய்திகள்

ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-02-13 13:54 IST   |   Update On 2017-02-13 13:54:00 IST
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதல்- அமைச்சர் பன்னீர் ஆகியோர் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் போன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்க கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சூரம்பட்டி 4 ரோட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் பழைய பாளையத்தில் உள்ள மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களுக்கு இன்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதே போல ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் ஆகிய எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News