செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2017-02-02 11:27 IST   |   Update On 2017-02-02 11:27:00 IST
பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 டன் ரே‌ஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி:

உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் பொள்ளாச்சிபாலக்காடு சாலை வடுகபாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 10 டன் ரே‌ஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 10 டன் ரே‌ஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த டிரைவர் அபிநவ்(30), கிளீனர் அஜீத்(24) ஆகியோரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரியின் உரிமையாளர் அஸ்லாம் என்பது தெரியவந்தது. அவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News