செய்திகள்
மத்திய மந்திரி பதவியை பொன் ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைதுறை துணை தலைவர் பாட்சா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கதர் ராட்டை சுற்றும் காந்தி படத்தை அகற்றி விட்டு பிரதமர் மோடி படத்தை வெளியிட்டு உள்ளது அவமதிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிகட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார்.
ஆனால் அவர் கூறியபடி ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. எனவே தார்மீக பொறுப்பேற்று மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணனும், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.