செய்திகள்

பருவமழை பொய்த்து போனதால் குடங்களில் தண்ணீர் சுமந்து சென்று தர்பூசணி பயிரிடும் விவசாயிகள்

Published On 2017-01-16 12:54 IST   |   Update On 2017-01-16 12:54:00 IST
பருவ மழை பொய்த்து போனதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. தண்ணீர் பாய்ச்ச வழியின்றி விவசாயிகள் குடங்களில் சுமந்து சென்று விதை போட்ட இடங்களில் தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர், தேவந்தவாக்கம், மெய்யூர், மைலாப்பூர், காக்கவாக்கம், மயிலாப்பூர், பூண்டி, சோமதேவன் பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பருவ மழை பொய்த்து போனதால் தண்ணீர் இன்றி நெல் பயிர்கள் கருகியது.கருகிய நெல்பயிர்களில் கால் நடைகளை மேய்ச்சலுக்காக விட்டு விட்டனர்.

இந்நிலையில் குறைந்த தண்ணீரால் சாகுபடி செய்யும் தர்பூசணி, வெள்ளரிக்காய், மிளகாய் போன்றவற்றை பயிர் செய்ய விவசாயிகள் முடிவு செய்து விதைகள் போட்டு உள்ளனர்.

விதை முளைக்கும் போது தண்ணீர் அவசியம் என்பதால் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி விவசாயிகள் குடங்களில் சுமந்து சென்று விதை போட்ட இடங்களில் தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பருவ மழை பொய்த்து போனதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

விவசாயத்திற்கு நீர் இல்லாததால் குடங்களில் தண்ணீர் சுமந்து சென்று விளை நிலங்களில் ஊற்றும் நிலை ஏற்பட்டு இருக்கிறது’ என்றனர்.

Similar News