செய்திகள்

காரைக்குடி அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம்

Published On 2016-12-17 15:47 IST   |   Update On 2016-12-17 15:47:00 IST
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மாமன் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகள் காளியம்மாள் (வயது 22). இவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான், மணியாரம் பட்டியில் உள்ள மாமா வீட்டில் தங்கி இருந்தேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் அங்கு படுத்திருந்தபோது, மாமா மகன் கருப்பையா (22) பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.

இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டிச் சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராதுராஜீ வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியான கருப்பையாவை தேடி வருகிறார்.

Similar News