காஞ்சீபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 3 பேர் பலி
காஞ்சீபுரம்:
வேலூர் மாவட்டம் ஓச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (40). காஞ்சீபுரம் கம்மாளத் தெருவில் பிரியாணி கடை நடத்தி வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் ஓச்சேரியில் இருந்து காஞ்சிபுரம் வந்து செல்வார்.
நேற்று இரவு வியாபாரம் முடிந்து இரவு 10 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கீழம்பி பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது ஷெரீப் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷெரீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒருவர் அங்கேயே இறந்தார். மற்றொருவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.