செய்திகள்

வாழ்நாள் முழுவதும் கருப்பு சட்டை அணிய அ.தி.மு.க. பிரமுகர் முடிவு

Published On 2016-12-15 13:21 IST   |   Update On 2016-12-15 13:21:00 IST
ஜெயலலிதா மறைவையொட்டி வாழ்நாள் முழுவதும் கருப்பு சட்டை அணிய போவதாக அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் சபதம் எடுத்து உள்ளார்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணியை சேர்ந்தவர் ஏ.எம்.ஆர்.ரவி. இவர் அ.தி. மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிதுணை தலைவராக உள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு இவரது மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.தலையை மொட்டை அடித்தார். இதை தொடர்ந்து அவர் ஒரு சபதம் எடுத்து உள்ளார். இனி தனது வாழ்நாள் முழுவதும் கலர்சட்டை அணிவது கிடையாது. கருப்பு சட்டை தான் அணிவேன் என்று சபதம் எடுத்து உள்ளார்.

இதைதொடர்ந்து ரவி இப்போது தினமும் கருப்பு சட்டை அணிந்து வருகிறார்.

வழக்கு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்தபோது ஜெயலலிதா விடுதலை பெறும்வரை கருப்பு சட்டை அணிந்திருப்பேன் என்று உறுதி எடுத்து அதன்படி கருப்பு சட்டை அணிந்திருந்தார்.

ஜெயலலிதா விடுதலை ஆனதும் கருப்பு சட்டையை கழற்றினார். இப்போது ஜெயலலிதா மறைவையொட்டி வாழ்நாள் முழுவதும் கருப்பு சட்டை அணிவேன் என அவர் உறுதி பூண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News