செய்திகள்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்: மாணவன் பலி
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மாணவன் பலியானார். விபத்தில் மாணவன் பலியானது அறிந்ததும், அவரது உறவினர்கள் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே உள்ள மானாம்பதி மேட்டுக்காலனியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் கோகுல் (வயது 16). மானாம்பதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இன்று காலை கோகுல் அதே பகுதியை சேர்ந்த உடன் படிக்கும் நண்பர் ராகுலுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். கோகுல் வண்டியை ஓட்டினார்.
பள்ளி அருகே சென்ற போது ஆலந்தூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே கோகுல் பலியானார். ராகுல் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் மாணவன் கோகுல் பலியானது பற்றி அறிந்ததும், அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். திடீரென அவர்கள் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து பெருநகர் போலீசார் அரசு பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் அருகே உள்ள மானாம்பதி மேட்டுக்காலனியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் கோகுல் (வயது 16). மானாம்பதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இன்று காலை கோகுல் அதே பகுதியை சேர்ந்த உடன் படிக்கும் நண்பர் ராகுலுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். கோகுல் வண்டியை ஓட்டினார்.
பள்ளி அருகே சென்ற போது ஆலந்தூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே கோகுல் பலியானார். ராகுல் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் மாணவன் கோகுல் பலியானது பற்றி அறிந்ததும், அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். திடீரென அவர்கள் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து பெருநகர் போலீசார் அரசு பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.