செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ரூ. 5 லட்சம் பொருட்கள் கொள்ளை

Published On 2016-11-03 13:08 IST   |   Update On 2016-11-03 13:08:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே எலக்ட்ரிக்கல் கடையில் ரூ. 5 லட்சம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம், ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளார்.

நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச் சென்றார். நள்ளிரவில் வந்த மர்மகும்பல் ‌ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் கடையில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான வயர், பொருட்களை சுருட்டி சென்று விட்டனர்.

இன்று காலை கடையின் ‌ஷட்டர் உடைந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News