செய்திகள்

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2016-10-31 11:54 IST   |   Update On 2016-10-31 11:54:00 IST
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 17). கல்லூரி மாணவர். இவர் கடந்த 27-ந்தேதி நண்பர்களுடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.

கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது டில்லிபாபு தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பலியானார்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News