செய்திகள்
புதுக்கோட்டை அருகே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்
புதுக்கோட்டை அருகே போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் ரத்னகுமார். இவருக்கு பவித்ரா (வயது18), நர்மதா (16) ஆகிய 2மகள்கள் உள்ளனர். இதில் பவித்ராவை அதே முகாமில் வசிக்கும் சுரேஷ்குமார் (25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். நர்மதா திருமயம் அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2-ந்தேதி நர்மதாவை சந்தித்த சுரேஷ்குமார், ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். இதையடுத்து ரத்னகுமார் மகளை பல்வேறு இடங்களில் தேடிய போது, அவரை மருமகன் சுரேஷ் குமார் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனிடையே குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்து விட்டதால், நர்மதாவை அழைத்து வந்து மீண்டும் பள்ளி விடுதியிலேயே விட்டு விட்டு சுரேஷ்குமார் தப்பியோடிவிட்டார். இது பற்றி நர்மதா கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். அதன் பின்னர் பாதுகாப்பு கருதி திருமயம் போலீஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் மாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சுரேஷ்குமார் கூறியதால் கழிவறைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுரேஷ்குமார் தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. லோகநாதன், பொன்னமராவதி டி.எஸ்.பி. கோபாலசந்திரன் ஆகியோர் திருமயம் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் ரத்னகுமார். இவருக்கு பவித்ரா (வயது18), நர்மதா (16) ஆகிய 2மகள்கள் உள்ளனர். இதில் பவித்ராவை அதே முகாமில் வசிக்கும் சுரேஷ்குமார் (25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். நர்மதா திருமயம் அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2-ந்தேதி நர்மதாவை சந்தித்த சுரேஷ்குமார், ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். இதையடுத்து ரத்னகுமார் மகளை பல்வேறு இடங்களில் தேடிய போது, அவரை மருமகன் சுரேஷ் குமார் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனிடையே குடும்பத்தினருக்கு விஷயம் தெரிந்து விட்டதால், நர்மதாவை அழைத்து வந்து மீண்டும் பள்ளி விடுதியிலேயே விட்டு விட்டு சுரேஷ்குமார் தப்பியோடிவிட்டார். இது பற்றி நர்மதா கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். அதன் பின்னர் பாதுகாப்பு கருதி திருமயம் போலீஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் மாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சுரேஷ்குமார் கூறியதால் கழிவறைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுரேஷ்குமார் தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. லோகநாதன், பொன்னமராவதி டி.எஸ்.பி. கோபாலசந்திரன் ஆகியோர் திருமயம் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் இருந்து விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.