செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1971 பேர் மனு தாக்கல்
உள்ளாட்சி தேர்தலுக்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 1971 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6075 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு கடந்த 26-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
மாவட்டத்தில் உள்ள 27 மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர்கள் பதவிக்கு 35 பேரும், 252 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 29 பேரும், 633 ஊராட்சி தலைவர் பதவிக்கு 229 பேரும், 4617 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1640 பேரும் 264 நகரமன்ற கவுன்சிலர்கள் பதவிக்கு 6 பேரும், 282 பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 32 பேரும் என இதுவரை 1971 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று அமாவாசை தினம் என்பதால் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6075 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு கடந்த 26-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
மாவட்டத்தில் உள்ள 27 மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர்கள் பதவிக்கு 35 பேரும், 252 ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 29 பேரும், 633 ஊராட்சி தலைவர் பதவிக்கு 229 பேரும், 4617 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1640 பேரும் 264 நகரமன்ற கவுன்சிலர்கள் பதவிக்கு 6 பேரும், 282 பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 32 பேரும் என இதுவரை 1971 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று அமாவாசை தினம் என்பதால் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.