செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2016-09-23 14:19 IST   |   Update On 2016-09-23 14:20:00 IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற 6 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் வெளி நாட்டு பணம் கடத்த இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று அதிகாலையில் சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த சிங்கமுத்து நடராஜன், ஜூபே உதின், மதார்சாதிக் உள்பட 6 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவர்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது அமெரிக்க டாலர்கள், யூரோ நாணயங்கள் ரூ.1 கோடி சிக்கியது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 6 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பணம் எங்கிருந்து யாருக்காக கடத்தப்பட்டது? இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

Similar News