செய்திகள்
கூடுவாஞ்சேரி பெண் கொலையில் கவுன்சிலர் - மகன் கைது
கூடுவாஞ்சேரியில் சொத்து தகராறில் தங்கையை கூலிப்படை ஏவி கொன்ற கவுன்சிலர், அவருடைய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூரை சேர்ந்தவர் தன்ராஜ். இவரது மனைவி செல்லம்மாள் (52). கடந்த மாதம் 31-ந்தேதி அவர் அருகில் உள்ள ஏரிக்கரையில் ஆடு மேய்க்க சென்றார். அப்போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. முகிலன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் செல்லம்மாள் கொலையில் அவரது அண்ணனும், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு உறுப்பினருமான நாகப்பன், அவரது மகன் கவுரிராஜிக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து நாகப்பன், கவுரிராஜை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து தகராறில் தங்கை செல்லம்மாளை கூலிப் படையை ஏவி நாகப்பன் தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்தது.
பெருமாட்டு நல்லூர் பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலம் தொடர்பாக நாகப்பனுக்கும் அவரது சகோதரின் செல்லம்மாள், நவநீதம் ஆகியோருக்கு இடையே தகராறு இருந்து வந்தது.
இந்த நிலம் தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்தது. இதில் செல்லமாள், நவநீதம் ஆகியோருக்கு சாதகமாக தீர்ப்பு ஆனதாக தெரிகிறது. இதனால், நாகப்பனுக்கும், அவரது சகோதரிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இதற்கிடையே பிரச்சினைக்குரிய இடத்தை வேறு ஒருவருக்கு விற்க நாகப்பன் பணம் பெற்று இருக்கிறார். இதனால் பணத்தை திருப்பி கேட்டு அவர்கள் நாகப்பனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து நாகப்பன் மீண்டும் தனது சகோதரிகளிடம் நிலம் குறித்து சமாதானம் பேசி இருக்கிறார். இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. மேலும் செல்லம்மாளின் மகனுக்கும் நாகப்பனின் மகனுக்கும் இடையேயும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலத்தகராறே கடைசியில் தங்கை செல்லம்மாளை கூலிப்படை ஏவி கொல்லும் அளவுக்கு சென்று உள்ளது.
இந்த கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த ரவுடி செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார். ரவுடி செல்வம் மீது ஏற்கனவே ம.தி.மு.க. ஊராட்சி தலைவர் சம்பத் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதான கவுன்சிலர் நாகப்பன், அவரது மகன் கவுரிராஜ் ஆகியோரை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சொத்து தகராறில் தங்கையை அண்ணனே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூரை சேர்ந்தவர் தன்ராஜ். இவரது மனைவி செல்லம்மாள் (52). கடந்த மாதம் 31-ந்தேதி அவர் அருகில் உள்ள ஏரிக்கரையில் ஆடு மேய்க்க சென்றார். அப்போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. முகிலன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் செல்லம்மாள் கொலையில் அவரது அண்ணனும், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு உறுப்பினருமான நாகப்பன், அவரது மகன் கவுரிராஜிக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து நாகப்பன், கவுரிராஜை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து தகராறில் தங்கை செல்லம்மாளை கூலிப் படையை ஏவி நாகப்பன் தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்தது.
பெருமாட்டு நல்லூர் பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலம் தொடர்பாக நாகப்பனுக்கும் அவரது சகோதரின் செல்லம்மாள், நவநீதம் ஆகியோருக்கு இடையே தகராறு இருந்து வந்தது.
இந்த நிலம் தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்தது. இதில் செல்லமாள், நவநீதம் ஆகியோருக்கு சாதகமாக தீர்ப்பு ஆனதாக தெரிகிறது. இதனால், நாகப்பனுக்கும், அவரது சகோதரிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
இதற்கிடையே பிரச்சினைக்குரிய இடத்தை வேறு ஒருவருக்கு விற்க நாகப்பன் பணம் பெற்று இருக்கிறார். இதனால் பணத்தை திருப்பி கேட்டு அவர்கள் நாகப்பனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து நாகப்பன் மீண்டும் தனது சகோதரிகளிடம் நிலம் குறித்து சமாதானம் பேசி இருக்கிறார். இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. மேலும் செல்லம்மாளின் மகனுக்கும் நாகப்பனின் மகனுக்கும் இடையேயும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலத்தகராறே கடைசியில் தங்கை செல்லம்மாளை கூலிப்படை ஏவி கொல்லும் அளவுக்கு சென்று உள்ளது.
இந்த கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த ரவுடி செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார். ரவுடி செல்வம் மீது ஏற்கனவே ம.தி.மு.க. ஊராட்சி தலைவர் சம்பத் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதான கவுன்சிலர் நாகப்பன், அவரது மகன் கவுரிராஜ் ஆகியோரை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சொத்து தகராறில் தங்கையை அண்ணனே கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.