செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் 66-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது
சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 66-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை, தடுப்பு கண்ணாடிகள் உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்தும் கண்ணாடி உடைந்து விழுவது நிற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 66-வது முறையாக விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பன்னாட்டு விமான முனையம் பயணிகள் செல்லும் பின் பகுதியில் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து 8 அடி நீளம் 4 அடி அகலம் உள்ள கண்ணாடி உடைந்து விழுந்தது. அப்போது பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை, தடுப்பு கண்ணாடிகள் உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்தும் கண்ணாடி உடைந்து விழுவது நிற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 66-வது முறையாக விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பன்னாட்டு விமான முனையம் பயணிகள் செல்லும் பின் பகுதியில் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து 8 அடி நீளம் 4 அடி அகலம் உள்ள கண்ணாடி உடைந்து விழுந்தது. அப்போது பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.