செய்திகள்

ஓடுபாதையில் சென்ற போது விமானத்தில் திடீர் கோளாறு: 122 பயணிகள் தப்பினர்

Published On 2016-07-29 12:49 IST   |   Update On 2016-07-29 12:49:00 IST
சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. பயணிகள் உள்ளே அமர்ந்த நிலையிலேயே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆலந்தூர்:

சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 6.15 மணிக்கு 122 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது.

விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக இழுவை வண்டி மூலம் விமானம் பின்னோக்கி இழுக்கப்பட்டு புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

பின்னர் பயணிகள் உள்ளே அமர்ந்த நிலையிலேயே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு விமான கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் எந்திர கோளாறு சரி செய்யப்பட்டு காலை 8.25 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. விமானி சரியான நேரத்தில் எந்திர கோளாறை கண்டுபிடித்ததால் 122 பயணிகளும் உயிர் தப்பினர்.

Similar News