நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தில் இருந்து நேற்று இரவு ஏராளமான மீனவர்கள் தங்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களின் மீன் பிடித்து விட்டு இன்று காலை கரை திரும்புவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை முதல் மீனவர்கள் கோட் டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும் பிக்கொண்டு இருந்தனர்.
இதற்கிடையே கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த செய்யது அலி அக்பர் (வயது 26), அப்பாஸ் (32), பொன்னையா (45), பாலு (40) ஆகியோர் சென்ற நாட்டுப்படகில் திடீரென ஓட்டை விழுந்தது.
இதனை அவர்கள் உடனடியாக சரிசெய்ய முயன்றனர். ஆனாலும் ஓட்டை வழியாக படகுக்குள் தண்ணீர் அதிக அளவில் புகுந்தது. மேலும் படகும் சிறிது, சிறிதாக மூழ்க தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து சென்ற திருப்பன்னவாசல் கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு பதி, செந்தில்குமார், ராஜ் மோகன் ஆகியோர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் படகில் தத்தளித்து கொண்டிருந்த 4 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.