செய்திகள்

கச்சத்தீவை இந்திய அரசு மீட்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி

Published On 2016-06-28 12:30 IST   |   Update On 2016-06-28 15:32:00 IST
வங்காள தேசத்துக்கு அருகில் உள்ள ஒரு தீவை மேற்கு வங்காள அரசு மீட்டது போல் கச்சத்தீவையும் இந்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் கூறியுள்ளார்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை தற்போது கொலை நகரமாக மாறியுள்ளது. ஒரு கோடி மக்கள் தொகையை நெருங்கி கொண்டிருக்கிற சென்னை நகரத்தில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் என்ஜினீயரிங் மாணவி கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் சட்டமும் ஒழுங்கும் எந்த நிலைமையில் உள்ளது என்பதற்கு இது ஒரு ஆதாரம். ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

தேர்தல் கூட்டணி என்பது வேறு, மாற்று அரசியல் என்பது வேறு. தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் வரும், போகும். மேலும் தே.மு.தி.க., த.மா.கா. ஆகியோர் மக்கள் நலக்கூட்டணியை விட்டு போய் விட்டனரா?, இருக்கின்றார்களா? என நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

தமிழகக்தில் பொது மருத்துவம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதற்கு மேட்டூரில் கண் பரிபோனவர்கள்கள் தான் சாட்சி. இது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகக்தில் 500 மதுக்கடைகளை மூடியுள்ளதால் எந்த மாற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை.

வங்காள தேசத்துக்கு அருகில் உள்ள ஒரு தீவை மேற்கு வங்காள அரசு மீட்டது போல் கச்சத்தீவையும் இந்திய அரசு மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News